தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகம் சூறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகம் இன்று அடித்து நொறுக்கப்பட்டது.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டது. தனி அணியாக பிரிந்து வந்தவர்கள் நடிகர் நெப்போலியனை தங்களது அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
மேலும், தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை கீழ்ப்பாக்கத்தில்உள்ள கூடைப்பந்தாட்டக் கழகத்தின் அலுவலகத்திற்கு 40க்கும் மேற்பட்டோர் வந்து அலுவலகத்ைத அடித்து நொறுக்கினர். அங்கிருந்த இருக்கைகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து மேலாளர் நாராயணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications