ரூ.200 கோடியில் புதிய சட்டமன்றம்-12ம் தேதி அடிக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டடமும், தலைமை செயலக வளாகமும் கட்டப்படவுள்ளது.
ரூ.200 கோடி செலவிலான இந்த பல மாடி கட்டிடத்தை ஜெர்மன் நிறுவனம் வடிவமைத்தது. அதில் முதல்வர் கருணாநிதி சில மாற்றங்களைச் செய்தார்.
இதையடுத்து தனது இறுதி ஸ்கெட்சை ஜெர்மன் நிறுவனம் அரசிடம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி புதிய சட்டசபை-தலைமை செயலக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது.
விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். அவை முன்னவர் அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த கட்டடத்தை பொதுப் பணித்துறை கட்டவுள்ளது. இந்தப் பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications