அடாவடி உ.பி. அமைச்சர் நீக்கம்-மாயாவதி அதிரடி

Subscribe to Oneindia Tamil

லக்னெள: கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை விடுவிக்கக்கோரி, உத்தரப் பிரதேச மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜமுனா நிஷாத், தன் ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தைத் தாக்கினார். இதில் போலீஸ்காரர் கொலையானார்.

இதையடுத்து அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் முதல்வர் மாயாவதி. நிஷாத் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

கோரக்பூர் அருகே மகராஜ் கஞ்ச் பகுதியில் தலித் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவரை விடுவிக்கக்கோரி ஜமுனா நிஷாத் 50 ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.

போலீஸாரை அக் கும்பல் தாக்க முயலவே அவர்கள் தடியடி நடத்தினர். அப்போது ஜமுனாவி்ன் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், ஏட்டு கிருஷ்ணானந்த் ராய் என்பவர் பலியானார்.

இதையடுத்து அமைச்சர் ஜமுனா நிஷாத், அவரது ஆதரவாளர்கள் உள்பட 50 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நிஷாத்தை தனது வீட்டுக்கு வரவழைத்த மாயாவதி டோஸ் விட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை பதவி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த மாயாவதி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவை வைத்து ஜமுனா கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+