பெண்ணிடம் சில்மிஷம்-கண்டக்டருக்கு 'தர்ம' அடி!
நித்திரவிளை: பெண்ணிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் கண்டக்டரை ஊர் மக்கள் அடித்து உதைத்தனர்.
மார்த்தாண்டத்தில் இருந்து '82 கே' என்ற அரசு பஸ் ததேயூபுரம் வரை இயக்கப்படுகிறது.
இன்று காலை 6.30 மணியளவி்ல் இந்த பஸ்சில் ஒரு பெண் தனது கைக் குழந்தையுடன் ஏறினார். பஸ்சில் சிலரே இருந்தனர். இந் நிலையில் அந்தப் பெண்ணிடம் கண்டக்டர் பலமுறை சில்மிஷம் செய்துள்ளார்.
பஸ்சில் குறைவான பயணிகளே இருந்ததால் சத்தம் போடாமல் இருந்தார். தனது ஊரில் இறங்கிய அந்தப் பெண் தனது உறவினர்களிடம் கண்டக்டரின் சில்மிஷம் குறித்து கூறினார்.
இதையடுத்து அவர்கள் ஒன்று திரண்டு வந்தனர். மார்த்தாண்டம் சென்று விட்டு அந்த பஸ் மீண்டும் திரும்பி சந்தனபுரம் வந்ததும் பஸ்சில் ஏறிய அவர்கள் கண்டக்டரை அடித்து உதைத்தனர்.
அரசு பஸ் கண்டருக்கு ஊர் மக்கள் நடத்திய இந்த 'பூஜை' அங்கு பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications