டூட்டியில் 'உல்லாசம்'- ஏட்டு மீது நடவடிக்கை
ஈரோடு: பணியில் இருந்தபோது விபச்சாரப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் ரவி. நேற்று முன்தினம் இரவு இவருக்கு ரோந்துப் பணி கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் பேரில் மொடக்குறிச்சி பஸ்நிலையம் வந்தார் ரவி. அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அப்பெண் விபச்சாரப் பெண் என்றும், அவருடன் உல்லாசமாக இருக்கவே 3 வாலிபர்களும் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபர்களை எச்சரித்து விரட்டி விட்டார் ரவி. பிறகு ஒரு மோட்டார் சைக்கிளில், அப்பெண்ணை அழைத்துச் சென்றார். விடிய விடிய அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டடு அதிகாலையில், நல்ல போதையில் காவல்நிலையம் வந்தார்.
அவரை உள்ளே விடாமல் போலீஸார் வாசலிலேயே நிறுத்தி அமர வைத்தனர். பின்னர் உயரதிகாரிகளுக்குத் தகவல் போனது.
இதையடுத்து ரவியிடம் விசாரணைநடத்தப்பட்டது. அப்போது, பஸ் நிலையத்தில் அந்தப் பெண்ணை பிக்கப் செய்த ரவி, நேராக நஞ்சை ஊத்துக்குளி என்ற இடத்திற்குச் சென்றார். அங்குள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில் வைத்து அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.
பின்னர் அவரை அனுப்பி விட்டு மது போதையில் காவல்நிலையம் வந்துள்ளார். ஏற்கனவே நான்கு முறை பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்ட் ஆனவர் ரவி.
இந்த முறை பணி நேரத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாலும், போதையில் காவல் நிலையம் வந்ததாலும் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அவிநாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications