டாக்டர்கள் மீது தடியடி-பெண் போலீஸ் உள்பட இருவர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னையில் மருத்து மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது சாலை மறியல் செய்த டாக்டர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தில் இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகம் அருகே ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் இளநிலை டாக்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி டாக்டர்களை கலைத்தனர். இதில் 20 டாக்டர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சாலை மறியல் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டாக்டர்கள் திணேஷ், சுரேஷ், ராஜேஸ்வரி உள்ளிட்ட 60 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேசமயம், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தி, கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதற்காக கீழ்ப்பாக்கம் காவல் நிலைய பெண் காவலர் தங்கமணி மற்றும் காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications