முதுமையிலும் பேரன்பு: மனைவி மரணம்-கணவரும் சாவு!
Subscribe to Oneindia Tamil
தேனி: தனது மனைவி இறந்த துக்கம் தாளாமல் முதியவரும் மரணமடைந்தார்.
தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கந்தன் (75). துப்புறவு பணியாளரான இவரது மனைவி பெருமாயி அம்மாள் (68).
இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்களுக்கு மேல் ஆகிறது. அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர்.
இந் நிலையில் பெருமாயி அம்மாளுக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்து போனார்.
தனது கண் எதிரே மனைவி இறந்தததை தாங்கிக் கொள்ள முடியாத கந்தனும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து போனார்.












Click it and Unblock the Notifications