ராமதாஸ் புகார்- டிஜிபி மறுப்பு; டிஐஜி எச்சரிக்கை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் டாக்டர் ராமதாஸ் பேட்டி ஒன்றில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும் 'டி3டி' என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் தொலைபேசி ஒட்டு கேட்டல்கள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள மற்றும் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதில்லை, இது ஏற்கனவே தெளிவு பட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும், தேச நலனுக்கும் எதிராக செயல்படுபவர்கள் என்று சந்தேகப்படும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் மட்டுமே மத்திய-மாநில அரசுகள் விதித்துள்ள வரையறைகளின்படி கண்காணிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்க வேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்களோ, அரசியல் கட்சி தலைவர்களோ இது குறித்து அச்சமோ, ஐயமோ கொள்ளத் தேவை இல்லை.
டாக்டர் ராமதாஸ் கூறுவது போல டி3டி என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து ஒட்டு கேட்பதற்காக எந்த ஒரு சாதனமும் தமிழக நுண்ணறிவு பிரிவு (intellignce wing) சார்பில் வாங்கப்படவில்லை. தனியார் நிறுவனத்தின் மூலம் தொலைபேசிகளை ஒட்டு கேட்டல் என்பது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி சாத்தியமும் இல்லை.
லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சில உரையாடல்களை பொறுத்தவரை, அது குறித்து விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை பெற்ற பின்னர், மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டாக்டர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குபுறம்பான, ஆதாரமில்லாத கற்பனைச் செய்தியாகும் என்று கூறியுள்ளார் டி.ஜி.பி. ஜெயின்.
டி.ஐ.ஜி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை:
டி.ஐ.ஜி. சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி ஒன்றில், எனது மனைவி மம்தா ஜிவால், டி3டி என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு இயக்குனராக இருப்பதாகவும், இந்த நிறுவனம் மூலம் தொலைபேசி ஒட்டு கேட்டல்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது உண்மைக்கு புறம்பானது மற்றும் அவதூறான செய்தியும் ஆகும்.
இது போன்ற உண்மைக்கு மாறான தகவல் களை கூறுவதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இனிமேலும் இது போன்ற அவதூறு பரப்பும் செயல்கள் தொடருமேயானால், அவதூறு பரப்புவோர்கள் மீதும், அதை வெளியிடும் பத்திரிக்கைகள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications