ஐந்தருவியில் பெண் காவலர்கள் 'மிஸ்ஸிங்'- குளிக்க தயங்கும் பெண்கள்
குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் குளிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் சீசன் இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில் துவங்கினாலும் 10 தினங்களாக கண்ணாமூச்சி காட்டி வந்தது. இரவில் லேசான சாரலும் தண்ணீர் வரத்தும் அதிகரி்ப்பதும், விடிந்தால் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து போவதுமாக இருந்தது.
இதனால் வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்தது. இந் நிலையில் கடந்த இரு தினங்களாக நல்ல சாரல் மழை பெய்ததையடுத்து தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து பகலிலும் அதிகரித்துள்ளது.
மெயின் அருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் பரவலாக கொடுகிறது.
இதையடுத்து பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் போலீசாரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஐந்தருவியில் இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர் தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பெரும்பாலான பெண்கள் குளிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications