சென்னையி்ல் விடிய விடிய ரெய்ட்- 129 ரெளடிகள் கைது
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் போலீசார் விடிய விடிய ரெய்டுகள் நடத்தி 129 ரெளடிகளையும் தலைமறைவாக இருந்த 86 குற்றவாளிகளையும் கைது செய்ததனர்.
நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி மொத்த்தம் 1,500 பேரை கைது செய்தனர்.
இதில் 129 பேர் ரெளடிகள், 171 பேர் பழைய குற்றவாளிகள், 86 பேர் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவானவாக இருந்தவர்கள் ஆவர்.
வடசென்னையின் புதுவண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் பகுதிகளில் தான் இவர்களி்ல் பெரும்பாலானவர்கள் சிக்கினர்.
இணை கமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ் ஆகியோர் தலைமையில் இந்த சோதனைக் நடந்தன. இதை கமிஷனர் சேகரே நேரடியாக ஒருங்கிணைத்தார்.
மேலும் நள்ளிரவில் அவரும் போலீஸ் படையுடன் சோதனைகள் நடத்தினார். 500க்கும் மேற்பட்ட இடங்களில் 5,000 போலீசார் விடிய விடிய இரவு சோதனைகள் நடத்தினர்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற 260 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 320 பேரும், அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 250 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 31ம் தேதி கமிஷ்னராக பதவியேற்ற பின் சேகர் நடத்தியுள்ள மிகப் பெரிய அதிரடி ஆபரேசன் இதுவாகும்.
இந்த சோதனைகள் தொடரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications