தடுப்பூசி-'புரளி' கிளப்பிய 2 நர்ஸ்கள் சஸ்பெண்ட்
நெல்லை: கெட்டு போன தடுப்பூசி மருந்தை குழந்தைகளுக்கு போடுமாறு மருத்துவ அலுவலர் வலியுறுத்துவதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தின் கீழ் செயல்படும் இந் நிலையத்தில் கெட்டு போன தடுப்பூசி மருந்தை குழந்தைகளுக்கு போடுமாறு மருத்துவ அலுவலர் வலியுறுத்துவதாகவும், இதை கண்டித்து 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, இவ்வாறு மிக அதிர்ச்சிகரமான புரளியைக் கிளப்பிய கிராம சுகாதார செவிலியர்கள் கிரிஜா, பாப்பா இருவரையும் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்தார்.
இது குறித்து சண்முகசுந்தரம் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் முன்னிலையிலே தடுப்பூசி குழந்தைகளுக்கு போட வேண்டும். செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களிலும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கிராம மக்கள் தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்து வெளிவரும் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications