கடலூர் மாநாடு- ஸ்டாலின் வருவாரா?

லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் இன்னும் சென்னை திரும்பவில்லை. எனவே அவர் வருவாரா என்பது சந்தேகம்தான்.
அப்படி ஒருவேளை அவர் மாநாட்டுக்கு வராவிட்டால், அவர் பங்கேற்காத முதல் திமுக மாநில மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த புதிய சட்டசபைக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை என்பது நினைவிருக்கலாம்.
திமுகவில் அழகிரி-ஸ்டாலின் தரப்புக்கு இடையே மீண்டும் பனிப் போர் மூண்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆட்சியில் மிக முக்கிய பதவியைப் பிடிக்க ஸ்டாலினும், கட்சியில் மிக முக்கிய பதவியைப் பிடிக்க அழகிரியும் முயன்று வருவதாக செய்திகள் வருகின்றன.
இந்த மோதலால் வேதனையடைந்ததால் தான் முதல்வர் கருணாநிதி தனது பிறந்த நாள் விழாவை ரத்து செய்தார் என்று கூறப்பட்டது. பின்னர் மூத்த தலைவர்களான அன்பழகன், ஆற்காடு வீராசாமியின் கோரிக்கைகளால் பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
மேலும் பிறந்த நாளையொட்டி நடந்த கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும் என்று சஸ்பென்ஸ் மட்டும் வைத்துவிட்டு, நிறுத்திவிட்டார் முதல்வர் கருணாநிதி.
இந் நிலையில் கடலூர் திமுக மாநாட்டில் அழகிரியின் மகள் கயல்விழி நேரடியாக அரசியலில் குதிக்கிறார்.
இந் நிலையில் தான் ஸ்டாலின் வருவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications