ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அரியலூர், ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்காவிட்டால் குண்டு வெடிக்கும் என கூறி மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதையடுத்து திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டைப் அடிக்கப்பட்ட கடிதம் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அரியலூர், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இருரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதேபோல திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications