கோவை டாக்டருக்கு ஐரோப்பிய மருத்துவ சங்க விருது
கோவை: கோவை ஜெம் மருத்துவமனை இயக்குநர் சி.பழனிவேலுவுக்கு ஐரோப்பிய எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கில் சமீபத்தில் விருது வழங்கப்பட்டது.
உணவுக் குழாயில் புற்றுநோய் பாதித்த பகுதியை லேப்ராஸ்கோபிக் முறையில் அகற்றும் சிகிச்சை குறித்த செயல் விளக்கத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பழனிவேலு கூறுகையில்,
உணவுக் குழாயில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற இதுவரை வழக்கமான அறுவைச் சிகிச்சை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இம்முறையில் அதிக வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் பின் விளைவுகள் போன்ற பிரச்னைகள் இருந்து வருகின்றன.
தற்போது லேப்ராஸ்கோபிக் முறையில் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்ய முடியும். இதன் மூலம் நோயாளி சிகிச்சை முடிந்து குறைந்த நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கினால் போதும்.
அண்மையில் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் கருத்தரங்கில் இச் சிகிச்சை முறை குறித்து வீடியோவில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும், விடியோ செயல் விளக்கங்களும் இடம் பெற்றன.
இதில் லேப்ராஸ்கோபிக் முறையில் உணவுக் குழாயில் புற்றுநோய் பாதித்த பகுதிகளை அகற்றும் சிகிச்சை முறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தலைவர் ஆன்டனியோ எம்.லேசி இவ் விருதை வழங்கினார் என்றார்.












Click it and Unblock the Notifications