ஆசிரியர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
விருதுநகர்: விருதுநகரில் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்துரை சேர்ந்தவர் ஜான்ராஜா. இவரது மகன் மகபூப் சுல்தான். பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
வகுப்பில் வரலாறு பாட ஆசிரியர் தேவதாஸ் மகபூப் சுல்தானை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவன் மகபூப் சுல்தான் தனது வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து சக மாணவர்கள் பள்ளியை முற்றுக்கையிட்டு ஆசிரியர் தேவதாஸ் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.












Click it and Unblock the Notifications