மகாதிரின் இனவாத பேச்சு-ஹிண்ட்ராப் கண்டனம்
கோலாலம்பூர்: தமிழ் இனவெறியர்கள் சேர்ந்துதான் இந்து உரிமைகளுக்கான நடவடிக்கை குழுவை (ஹிண்ட்ராப்) நிறுவியுள்ளனர் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளதற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் உதயமூர்த்தி கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது.
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கடந்த வாரம் பிளாக் ஒன்றில், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலுவை கடுமையாக கண்டித்து எழுதியிருந்தார்.
அதில், என்ன இனவெறியர் என்று டத்தோ சாமிவேலுவும், ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான கர்பால் சிங், முன்னாள் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பரம் குமாரசாமியும் கூறி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறும் சாமிவேலு கூறியுள்ளார். உண்மையில் ஹிண்ட்ராப் தலைவர்கள்தான் இன வெறியர்கள். தமிழ் இனவெறியர்களைக் கொண்ட அமைப்புதான் ஹிண்ட்ராப்.
இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் நோக்கத்தையே இவர்களும் பிரதிபலிக்கிறார்கள். மலேசிய நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், முன்னாள் இங்கிலாந்து 'முதலாளிகளை' நம்பி அவர்களிடம் முறையிடுகிறார்கள்.
மலேசிய இந்தியர்களுக்காக ஹிண்ட்ராப் குரல் கொடுக்கவில்லை. மாறாக தமிழர்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மகாதிரின் இந்தக் கருத்துக்கு ஹிண்ட்ராப் தலைவர் உதயமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயமூர்த்தி தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:
தனது 22 ஆண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் செய்த தவறுகளையெல்லாம் மறைக்க முயலுகிறார் மகாதிர் முகம்மது. அதன் ஒரு முகம்தான் இந்த இனவாத கருத்து.
மகாதிர் முகம்மது மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகம், ஊழல், இனவெறி காரணமாகவே மலேசியாவில் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினர் ஒடுக்கப்பட்டனர். மலேசியாவில் நிலவி வந்த இன நல்லிணக்கத்ைத சீர்குலைத்தவரும் மகாதிர்தான் என்பது மலேசியர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
மகாதிரின் கருத்துக்களால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் ஆச்சரியப்படவில்லை. மலேசியாவின் நலனை விட தனது சொந்த நலனே முக்கியம் என்ற கொள்கையுடன் இருக்கிறார் மகாதிர்.
மலேசிய பூர்வீக இந்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் மகாதிர். ஆனால் அவரது பேச்சால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அவர் செய் தவறுகள் மறைந்து விடப் போவதில்லை.
பிரதமராக அவர் இருந்த காலத்தில், மலேசியாவைச் சேர்ந்த அனைத்து இனத்தவருக்கும் சம கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார, மத சுதந்திரத்தை ஏற்படுத்த தவறியவர் அவர். குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்கு எதிராக நடந்து கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட பூர்வீக இந்தியர்களின் நலனுக்காகவே குரல் கொடுக்கிறது ஹிண்ட்ராப். இனம், மதம், மொழி, நிற வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களுக்கும் மலேசியாவில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றே ஹிண்ட்ராப் பாடுபட்டு வருகிறது.
கடந்த கால மகாதிர் அரசிலும், தற்போதைய பிரதமர் படாவியின் அரசிலும், இந்தியர்களின் நலன் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இந்திய மலேசியர்களின் குறைகளை சொகுசாக மறைத்து விட்டனர்.
ஆனால் இதையெல்லாம் பற்றி மகாதிர் கவலைப்படாமல், தனது தவறுகளை மறைக்கும் வகையிலேயே பேசிக் கொண்டிருப்பார் என்று
கூறியுள்ளார் உதயமூர்த்தி.
மலேசிய இந்திய காங்கிரஸ் கண்டனம்
இதற்கிடையே, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பழனிவேல் மகாதிரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஹிண்ட்ராப் குறித்து பேசுவதற்கு முன்பு தனது பூர்வீகம் குறித்து மகாதிர் முகம்மது அறிந்து கொள்ள வேண்டும். அவரது முன்னோர்கள் யார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மகாதிர் முகம்மதுவின் தந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், மலேசியாவுக்கு அவர் இடம் பெயர்ந்து வந்தவர் என்பதும், மலாய் இனப் பெண்மணியை அவர் திருமணம் செய்து கொண்டவர் என்பதும் நாடறிந்த உண்மை. ஆனால் மகாதிர்தான் இதை வசதியாக மறந்து விட்டார் என்று காட்டமாக கூறியுள்ளார்.
உதயமூர்த்தியின் சகோதரர்களான ஹிண்ட்ராப் நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், மனோகரன், கணபதிராவ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரஸ், ஹிண்ட்ராப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications