ராஜபாளையம் தலைமை ஆசிரியருக்கு சுற்றுச்சூழல் விருது
ராஜபாளையம்: சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் சிறப்பாக பணியாற்றிய ராஜபாளையத்தை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தமிழக அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மாநில விருதுகள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டை தங்கசாமி, விருதுநகர் மனோகரன் சாமுவேல், சேலம் தேவிகா, பண்ருட்டி பசுபதி, தஞ்சாவூர் பாலசுப் பிரமணியன், மதுரை ராஜேந்திரன் உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகரன் சாமுவேலுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் பணியாற்றியமைக்கு 2-வது பரிசாக சுற்றுச்சூழல் சுடரொளி விருதும், ரூ. 7500-க்கான காசோலையையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சுற்றுச்சூழலுக்கான மாநில விருது பெற்ற ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மனோகரன் சாமுவேலுக்கு பாராட்டு விழாவும், விருது வழங்கிய தமிழக அரசுக்கு நுகர்வோர் கவுன்சில் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவும் ராஜபாளையத்தில் நடந்தது.
விழாவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் வரவேற்றுப் பேசினார். சுற்றுச் சூழல் மாசுபடுவது தொடர்பான நடைமுறை சட்டங்களும், பாதுகாப்பு முறைகளும் பாடத்தில் உருவாக்கப்பட வேண்டும். என்பதை விளக்கி விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் தலைவர் சேது ராமராஜா பேசினார்.
மேலும் ஆரம்பக் கல்வியில் நிலம், நீர், காற்று, ஒலி மாசுபடுதல் மாணவனுக்கு பயன்படும் விதத்தில் சொல்லப்படவில்லை. இதுகுறித்த நேரடி அறிவு மாணவனுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என விருது பெற்ற மனோகரன் சாமுவேல் கூறினார். நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் சரோஜா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications