படிக்க பணம் இல்லாத நர்சிங் மாணவி தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகேணம் அருகே படிக்க பணம் இல்லாதாதல் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மோகனா (18). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் படிப்பில் படித்து வந்தார்.
முதலாம் ஆண்டு படிப்பை முடித்த நிலையில், இரண்டாம் ஆண்டு கல்வி கட்டணத்திற்கு பணம் வேண்டி தனது பெற்றோர்களிடம் கடந்த சில நாட்களாக வலியுத்தியுள்ளார்.
ஆனால், போதிய பணம் இல்லை என்று அவரது பெற்றோர்கள் தெரிவிக்கவே, மனம் உடைந்த மோகனா வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்து மோகனாவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனா உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications