நாடு முழுவதும் பாஜக அலை: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: நாடு முழுவதும் பாஜக அலை வீசுகின்றது என்று அக் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில்
நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் பேசுகையில், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தான் உள்ளனர்.
இளைஞர் அணி தான் ஒரு கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். அதனால் தான் அந்த அணிக்கு எல்லா கட்சிகளும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி பேசுவதுக்கு பெயர் இந்துத்துவா கிடையாது.
சிறுபான்மையினர், ஆதி திராவிடர்கள், ஆதரவு இன்றி இனி மத்தியிலும், மாநிலத்திலும், எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது.
இந்தியாவில் பாஜக தான் பெரிய கட்சி. காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு பதினாறு மாநில தேர்தல்களில் 12-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் பாஜக அலை வீசுகின்றது. இன்னும் மூன்று மாதத்திலோ அல்லது அதன் பின்னரோ மத்திய அரசுக்கு தேர்தல் வரலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications