300 கோவில் தேர்களை செப்பனிட ரூ.15 கோடி நிதி
செங்கல்பட்டு: தமிழகத்தில் பழுதடைந்த 300 கோவில் தேர்களை செப்பனிட ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
செஙகல்பட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மபெருமாள் கோவிலுக்கு 42.6 அடி உயர திருத்தேர் செய்ய ரூ. 30 லட்சத்தை தொழிலதிபர் ஆர்.பி.தர்மலிங்கம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய பெரியகருப்பன்,
தமிழ்நாட்டில் 960 கோவில்களில் மரத் தேர்கள் உள்ளன. இதில் பழுதடைந்த தேர்கள் குறித்து கணக்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் பழுதடைந்த நிலையில் 300 தேர்கள் இருப்பது தெரியவந்தது.
அந்தத் திருத் தேர்களை செப்பனிட ரூ.15 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இது தவிர மேலும் 15 புதிய தங்த்க தேர்கள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆட்சியில் திருப்பணிக்கு ரூ.157 கோடி செலவு செய்யப்பட்டது. இப்போது திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் இதுவரை ரூ.147 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications