பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று மாலைக்குள் சரியாகும்: எல்.கே.திரிபாதி
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று மாலைக்குள் சரியாகி விடும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தலையீட்டீன் பேரில் எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தலைமைச் செயலாளர் திரிபாதியை நேரில்சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திரிபாதி பேசுகையில், எண்ணை ஏற்றி வரும் கப்பல் வரத் தாமதம் ஆவதால்தான் தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசலை விடுவிக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனவே இன்று மாலைக்குள் நிலைமை சரியாகி விடும்.
அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் அனைத்து வகையான பெட்ரோல், டீசலை விற்க வேண்டும். குறிப்பிட்ட வகை பெட்ரோல், டீசலை மட்டுமே விற்போம் என்று யாரும் கூறக் கூடாது. அப்படி விற்பவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வகை பெட்ரோலை மட்டுமே விற்றால் அந்த பெட்ரோல் நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்
என்றார்.












Click it and Unblock the Notifications