சுரண்டை: குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி
சுரண்டை: சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் உள்பட மாணவிகள் பரிதாபமாய் இறந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:
கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த கணக்கர் நாடார் மகள் குமதா (வயது 10), சத்தியா (வயது 8), ஆகிய இரண்டு பேரும் அக்காள் மற்றும் தங்கைகள். மேலும் மற்றொருவரான குத்தாலிங்க நாடார் மகள் முத்து லெட்சுமி (வயது 10) ஆகிய 3 பேரும் அங்குள்ள இந்து துவக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் மாலையில் குளிப்பதற்கு கிணறு பம்ப்செட்டுக்கு சென்றனர். அங்கு மின்சாரம் இல்லாததால் குளிப்பதற்கு 3 பேரும் குளத்திற்கு சென்றனர். இவர்கள் தெரியாமல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
மூன்று மாணவிகளுக்குமே நீச்சல் தெரியாததால் 3 பேரும் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தனர். சம்பவம் அறிந்ததும் பெற்றோர்கள் தேடி வந்து கண்ணீர் மல்க கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications