கச்சா எண்ணை: ஒரு பீப்பாய் 144 டாலர்!!
லண்டன்: கச்சா எண்ணையின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை தற்போது 144 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணை வாங்கும் நாடுகள் மேலும் கவலையில் மூழ்கியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் எண்ணை வாங்கும் நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் பலநாடுகளில் பெட்ரோல்,டீசல் விலை கடுமையாகஉயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 144 டாலராக கிடுகிடுவென அதிகரித்தது. 2 நாட்களுக்கு முன்பு வரை இது 140 டாலராக இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததே இதற்குக் காரணம்.
கச்சா எண்ணையின் இந்த கிடுகிடு உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைகளுக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
இந் நிலையில் பங்குச் சந்தைகளில் யூக வர்த்தகம் மூலம் விலை உயர்வதைக் கட்டுப்படுத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிய 'price band mechanism' திட்டத்தை ஏற்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பான OPEC மறுத்துவிட்டது.
விலையை நிர்ணயிக்க பங்குச் சந்தையே சரியான இடம் என அந்த அமைப்பு கூறிவிட்டது.
மேலும் உயரும்:
இந் நிலையில் கச்சா எண்ணெயின் விலை இன்னும் சில வாரங்களில் பீப்பாய்க்கு 170 டாலரைத் தொடும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications