மிகைப்படுத்தும் சேனல்கள்: முன்ஷி பாய்ச்சல்
மால்டா (மேற்கு வங்கம்): நேயர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சாதாரண செய்தியைக் கூட மிகைப்படுத்தி பெரிதாக்கி விடுகின்றன செய்தி சேனல்கள் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கமாநிலம் மால்டாவில் செய்தியாளர்களிடம் முன்ஷி பேசுகையில், டெல்லி அருகே நொய்டாவில் ஆருஷி தல்வார் என்ற சிறுமி கொல்லப்பட்டது குறித்தும், டிவி நிகழ்ச்சிக்குப் பின் கொல்கத்தாவில் இளம் பெண் ஷிஞ்சினி சென் குப்தா உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும் டிவி சேனல்கள் அளவுக்கதிகமாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.
நேயர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பரபரப்பான செய்திகளை, சாதாரண செய்திகளை மிகைப்படுத்தி டிவி சேனல்கள் வெளியிடுகின்றன என்றார்.
முன்ஷி கூறுவதும் ஓரளவு உண்மைதான். செய்தி சேனல்கள் குறிப்பாக ஆங்கில சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளைத் தர வேண்டிய கட்டாயம் அவர்களிடம் உள்ளது. இதன் காரணமாகவே ஒரு சேனல் ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி விட்டால், அதை விட ஒரு படி மேலாக அந்த செய்தியை காட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் சேனல்கள் செயல்பட நேரிடுகிறது. இதுவே சாதாரண செய்தி பரபரப்பானதாகி விட காரணம்.












Click it and Unblock the Notifications