மீண்டும் பண வீக்க பயங்கரம்: 11.63% ஆனது
Subscribe to Oneindia Tamil

கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக பண வீக்கம் 11.05 சதவீதமாக உயர்ந்தது.
இந் நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் (ஜூன் 21 வரையிலான) பண வீக்கம் 11.63 சதவீதத்தை எட்டிவிட்டது.
பண வீக்கம் விகிதம் நாள்தோறும் கணக்கிடப்படுவதில்லை. வார அடிப்படையில் தான் கணக்கிடப்படும்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சிஆர்ஆரை (cash reserve ratio) உயர்த்தியது. இதனால் வங்கிகள் வசமுள்ள நிதியில் சுமார் ரூ. 20,000 கோடியை ரிசர்வ் வங்கி முடக்கி சந்தையில் பணப் புழக்கத்தை கட்டுப்படு்த்தியது.
ஆனாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டதால், பண வீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்க் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications