தமிழகம் முழுவதும் நாளை பஞ்சாலைகள் ஸ்டிரைக்
கோவை: நசிந்து வரும் பஞ்சாலைகளை காப்பாற்றக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாலை உரிமையாளர்கள் நாளை வேலைநிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பஞ்சு விலை உயர்வு, பஞ்சு பற்றாக்குறை, அதிக போக்குவரத்து செலவு, மின் பற்றாக்குறை, வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் பஞ்சாலைகள் நலிந்து வருகிறது. இதனால் அவை கடும் நெருக்கடியில் தவித்து வருகின்றன.
ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேல் பஞ்சு தமிழகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை. மாறாக 4 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அதை சமாளிக்க வெளி மாநிலங்களில் வாங்கப்படும் பஞ்சுக்கு, ஒரு கிலோ பஞ்சு ரூ 5 வரை வாடகை, சேவை வரி, மத்திய விற்பனை வரி, போன்றவற்றை செலுத்தி வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் தவிக்கின்றனர்.
தரமான பருத்திகளை வெளிநாட்டு வியாபாரிகள் வாங்கி அதையே அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே பருத்தி ஏற்றுமதியை உடனே நிறுத்த வேண்டும், பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்,சிறப்பு கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும், உள் நாட்டு பஞ்சு கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பஞ்சாலைகள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இந்த போராட்டத்தில் சைமா, டாஸ்மா, சிஸ்பா, மதுரை நூற்பாலைகள், அன்னூர் நூற்பாலைகள், இஸ்மா போன்ற பல அமைப்புகள் கலந்து கொள்கின்றன.












Click it and Unblock the Notifications