ராஜஸ்தான்-வசுந்தராவுக்கு கோவில் கட்டும் ஆதரவாளர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர்கள் கோவில் கட்டித் தரவுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவுக்கு பாஜகவில் தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். சமீபத்தில் அவரது தீவிர ரசிகரான போக்ரா என்பவர் துர்க்கை வடிவில் வசுந்தராவை சித்தரித்து போஸ்டர்ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜகவுக்குள்ளேயே இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதே போக்ரா மற்றொரு பரபரப்புக்கு வித்திட்டுள்ளார். ஜோத்பூர் மாவட்டம் கெரு என்கிற கிராமத்தில், வசுந்தராவுக்கு கோவில் கட்டப் போகிறாராம் போக்ரா.
இதில் கல்யாணி அம்மனாக வசுந்தராவை சித்தரித்து சிங்கம் மீது அவர் அமர்ந்திருப்பது போல சிலை அமைக்கவுள்ளார். கோவிலை கட்டும் பணிக்காக மதுரையைச் சேர்ந்த கட்டுமான நிபுணர்களை அவர் அமர்த்தியுள்ளார்.
ஏன் இப்படி என்று போக்ராவிடம் கேட்டால், நான் வசுந்தராவை கடவுளாக பார்க்கிறேன். போஸ்டர் அடித்தால்தான் தடுப்பார்கள். ஆனால் கோவில் கட்டுவதை யாரும் தடுக்க முடியாதுஎன்கிறார் போக்ரா.












Click it and Unblock the Notifications