பாக் வதந்தியில் ஆப்கன் இந்திய தூதரகம்
டெல்லி: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஆளானதாக பாகிஸ்தானில் வெளியாகியுள்ள செய்தி விஷமத்தனத்துடன் கூடிய வதந்தி என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஜலாலாபாத்தில் உள்ள துணைத் தூதரகம் மீது இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியானதாகவும் பாகிஸ்தான் இதழ்களில் இன்று செய்தி வெளியானது.
ஆனால் இது விஷமனத்தனமான பிரசாரம் என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த செய்தியில் சற்றும் உண்மை இல்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த சில தீவிரவாத அமைப்புகள்தான் இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்திய தூதரக அலுவலகங்களும் பலத்த பாதுகாப்பின் கீழ் உள்ளன என்றும், இந்திய அரசு விளக்கியுள்ளது












Click it and Unblock the Notifications