குமரியில் 100 மனநோயாளிகள் பிடிப்பட்டனர்
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ஒரே நாளில் 100 மனநோயாளிகள் பிடிபட்டனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மனநோயாளிகள் திரிந்து வருகின்றனர். இவர்களால் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் சிலர் உரிய பராமரிப்பின்றியும், விபத்துகளிலும் உயிர் இழந்து வருகின்றனர்.
இந்த சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள மனநோயாளிகளை பிடித்து காப்பகத்தில் ஓப்படைக்க மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலா உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் சார்தீப் தொண்டு நிறுவன பணியாளர்கள் இணைந்து மனநோயாளிகளை பிடித்தனர்.
காலையில் இருந்தே வீதிகளில் சுற்றியவர்களை விரட்டி, விரட்டி பிடித்து வேனில் ஏற்றினர். முரண்டு பிடித்தவர்களுக்கு பிஸ்கட், பழங்கள் வாங்கி கொடுத்து அழைத்து வந்தனர்.
மாவட்டம் முழுவதும் பிடிக்கப்பட்ட மனநோயாளிகள் 100 பேர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னை கீழ்பாக்கம் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications