நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு தோற்பது உறுதி: காரத்

செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் காரத் கூறுகையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் மத்திய அரசு வெல்ல முடியாது.
அரசைத் தோற்கடிப்பதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் அணி சேர்க்க முயன்று வருகிறோம்.
எங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர் ஆட்சியில்நீடிக்கும் தார்மீக உரிமையை அரசு இழந்து விட்டது. நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்பது உறுதி. மற்றவர்களின் நிீலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்களது வாக்குகள் நிச்சயம் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.
பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கொள்கை அளவில் எந்தப் பெரிய வேறுபாடு இல்லை. காங்கிரஸை விட நாங்கள்தான் பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகிறோம்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடனான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமான எந்த அம்சமும் இல்லை.
சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவுடனான ஒப்பந்தம் பாரபட்சமானது, இந்தியாவுக்கு விரோதமானது.
அணு ஆயுத நாடுஎன்ற வகையில், ஐ.ஏ.இ.ஏ.வுடன் செய்து கொண்ட ஒப்பந்த அம்சங்களை சீனா தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவால் அப்படி செய்ய முடியாது. காரணம் இந்தியா அணு ஆயுத நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
இதுபோன்ற பல முக்கிய அம்சங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்காமல் மத்திய அரசு மறைத்து விட்டது. எங்களது முக்கிய எதிர்ப்பே, அமெரிக்காவின் 123 ஒப்பந்தம்தான். இது முற்றிலும் நமக்கு எதிரானது என்றார் காரத்.












Click it and Unblock the Notifications