மோடி சென்னை வருகை - எதிர்த்து தமுமுக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னை வந்தார். அவரது வருகையை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

குஜராத்தி சமாஜம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோடி நேற்று மாலை நாலரை மணிக்கு சென்னை வந்தார். பின்னர் ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.

அங்கு அவரை பாஜக தலைவர்கள் இல.கணேசன், திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் சந்தித்து வரவேற்றனர்.

அதேபோல துக்ளக் ஆசிரியர் சோ, அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் ஆகியோரும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். பின்னர் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில்நடந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.

இதற்கிடையே, அண்ணா நகர் ஆர்ச் அருகே மோடியின் வருகையை எதிர்த்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+