ஆந்திராவில் பயங்கர லாரி விபத்து - 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நல்கொண்டா (ஆந்திரா): ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இன்று நடந்த பயங்கர லாரி விபத்தில் 11 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர்.
மிரியலகுடா என்ற இடத்திலிருந்து தேவரகொண்டா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி, வக்கனத்துலபாடு என்ற இடத்தில் வந்தபோது எதிரில் வந்த லாரிமீது பங்கரமாக மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மிரியலகுலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications