மாயாவதியுடன் கைகோர்க்கும் டிஆர்எஸ்-தப்புமா மத்திய அரசு?
டெல்லி: காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சி, மாயாவதியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.
மாயாவதியின் முடிவுப்படி மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அந்தக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
தனி தெலுங்கானா அமைப்பதாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவும், காங்கிரசும் டி.ஆர்.எஸ்சுக்கு உறுதியளித்து ஏமாற்றிவிட்டதால் இப்போது மாயாவதியுடன் கைகோர்த்துள்ளார் ராவ்.
டிஆர்எஸ்சிடம் 3 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிய சிறிய கட்சிகளை நம்பித்தான் தான் காங்கிரஸ் நம்பிக்கை தீர்மான 'கோதாவில்' இறங்கியுள்ளது. ஆனால், மதசார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை பேரம் பேசி வருவதாலும்,
சிரோமணி அகாலி தளம், டிஆர்எஸ் உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் ஆப்பு வைக்க முடிவெடுத்து வருவதாலும் மத்திய அரசு தப்புவது மிகக் கடினம் என்ற நிலை உருவாகி வருகிறது.