பிரதமர் ஏதோ சிக்கலில் மாட்டியுள்ளார்-பாஜக

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு ஓட்டுக்கு 25 கோடி ரூபாய் என பேரம் பேசப்படுகிறது என்று தகவல் வருகிறது. விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் கூறியபோது மன்மோகன்சிங்கோ, சோனியாகாந்தியோ அது பற்றி கவலைப்படவில்லை. எம்.பிக்களை விலைபேசும் போதுதான் அவர்களுக்கு விலைவாசி உயர்வு புரி்ந்திருக்கும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை. அவர்கள் ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க இந்திய-இலங்கை கடல் பகுதிகளை பொதுவானதாக அறிவிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் இருந்த போது காடு வெட்டி குரு மீது திமுக அரசு வழக்கு போடப்பட்டது. ஆனால் அப்போது உடனே நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டணியை விட்டு விலகிய பின்பு காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 1967ல் தேசிய கட்சி ஆட்சியில் இருந்தது. 1967க்கு பின்னர் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரவில்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் தலை தூக்க வேண்டும். இதற்கு காமராஜர் வழி வந்த அனைவரும் சிந்திக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications