பீஜ் வாலிபாலில் ஆபாசம்: பாஜக புகார்
சென்னை: சென்னையில் நடந்து வரும் சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் வீராங்கனைகள் கண்களை உறுத்தும் ஆடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் பாஜக போலீசில் மனு கொடுத்துள்ளது.
சர்வதேச பீச் வாலிபால் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்பட உலகின் பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இதில் பங்கேற்கும் வீராங்கனைகள் கவர்ச்சிகரமான உடைகளுடன் ஆடுகின்றனர். இந்த நிலையில், பாஜக துணை தலைவர் லலிதா சுபாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் சேகரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், போட்டியில் பங்கு பெறும் வீராங்கனைகள் தமிழ் கலாசாரத்துக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கண்களை உறுத்தும், உடலை வெளிக் காட்டும் வகையிலான ஆடைகளை அணிய தடை விதிக்க வேண்டும்.
விளையாட்டு என்பதை தாண்டி கவர்ச்சி இதன் மூலம் பிரதானமாக்கப்பட்டு விட்டது.
எனவே கற்கரை வாலிபால் போட்டியில், தமிழ்க் கலாச்சாரத்தை காக்கும் வகையிலான ஆடைகள் அணிய உத்தரவிட வேண்டும். அதை மீறி போட்டி நடத்தப்படுமானால், அப்போட்டிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சேகர் உறுதியளித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.