ஸ்ரீநகர் அருகே கண்ணி வெடித் தாக்குதலுக்கு 8 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே நர்பால் என்ற இடத்தில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகர் - பாரமுல்லா சாலையில் இன்று பிற்பகல் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. தீவிரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.
அப்போது அந்த சாலை வழியாக பாதுகாப்புப் படை வீரர்களுடன் வந்த பேருந்து இதில் சிக்கி சேதமடைந்தது.
சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications