நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல் - மாலையில் முடிவு
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்தவற்கான தேர்தல் இன்று நடந்தது.
நேபாளத்தில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வுசெய்ய இன்று தேர்தல் நடந்தது.
காத்மாண்டுவில் உள்ள சர்வதேச மாநாட்டு அரங்கில் காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5 மணியளவில் நேபாள நாடாளுமன்றத்தில், தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
ராம்ராஜ் பிரசாத் சிங், டாக்டர் ராம் பரன் யாதவ் மற்றும் ராம் ப்ரிட் பஸ்வாட் ஆகியோர் ஜனாதிபதி பதவி போட்டியில் உள்ளனர்.
துணை ஜனாதிபதி பதவிக்கு சாந்த ஷ்ரேஸ்தா, நான் பஹதூர் பிஷ்வகர்மா, அஷ்டலஷ்மி ஷாக்யா மற்றும் பர்மானந்தா ஜா ஆகியோர் போட்டியிட்டனர்.












Click it and Unblock the Notifications