கோவை மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு பிறந்த ஆண் குழந்தையை மர்ம பெண் திருடிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி கார்த்திகா செல்வி (37). நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகா செல்வி பிரசவத்துக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி சேர்க்கப்பட்டார்.
நேற்றிரவு கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு துணையாக தோழி சவுமியா உடனிருந்தார். குழந்தை பிறந்த சிறிது நேரம் கழித்து காய்ச்சல் வந்ததால் சவுமியா வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம பெண் ஒருவர் கார்த்திகாவின் உறவினர் என்று கூறி குழந்தைகள் வார்டுக்கு சென்றார். கார்த்திகா கண் அசந்த நேரம் பார்த்து குழந்தையை அந்த பெண் திருடிச் சென்றுவிட்டார்.
குழந்தை காணாமல் போனதை அறிந்த கிருத்திகா கதறி அழுதார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணையும் குழந்தையையும் வலை வீசித் தேடி வருகின்றனர்.
--












Click it and Unblock the Notifications