வாக்கெடுப்பை புறக்கணி்க்கும் 11 எம்பிக்கள்-அரசு தப்புகிறது?

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கட்சி மீது அதிருப்தியில் உள்ள 2 ராஜஸ்தான், 2 கர்நாடக பாஜக எம்பிக்கள், 1 குஜராத் பாஜக எம்பி உள்ளிட்ட 6 பேர் வாக்கெடுப்பை புறக்கணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவைச் சேர்ந்த 1 எம்பி, ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 2 ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் ஆகியோரும் வாக்கெடுப்பை புறக்கணிக்க உள்ளதாகத் தெரிகிறது.
சிவ சேனை எம்பியை காணவில்லை:
இதற்கிடையே தங்களது எம்பியான துக்காராம் ரெங்கே பாடீலைக் காணவில்லை என்றும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை, இன்று நடந்த சிவசேனை எம்பிக்கள் கூட்டத்துக்கும் அவர் வரவில்லை என்றும் அக் கட்சியின் லோக்சபா தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள சிவசேனை எம்பி இவர் தான் என்று தெரிகிறது. சிவசேனையின் நெருக்கடியில் இருந்து தப்ப அவர் எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
வாக்களிக்க மாட்டேன்-மம்தா பானர்ஜி:
மேலும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வாக்கெடு்ப்பில் பங்கேற்கப் போவதி்ல்லை என அறிவித்துவிட்டார்.
கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய அவர், நாளை டெல்லியில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றார்.
கம்யூனிஸ்டுகளை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா, வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் எனத் தெரிகிறது. அதன் ஒரு படியாகவே வாக்கெடுப்பை அவர் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications