For Daily Alerts
Just In
அனல் பறக்கும் விவாதம்-சோரன் 'சூப்பர்' தூக்கம்!
லோக்சபாவில் இன்று நம்பிக்கை கோரம் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அத்வானி விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பேச ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சிபு சோரன் காதில் ஹெட்போனை மாட்டியபடி படு சீரியஸாக தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்த உறுப்பினர்கள் நமட்டுச் சிரிப்புடன் சிபுவின் தூக்கத்தை ரசித்தனர்.
அத்வானி மற்றும் பிரணாபின் பேச்சால் அவையே சலசலப்பில் இருந்த போது, சிபு சத்தம் போடாமல் தூங்கியது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அரசுக்கு ஆதரவு தருவதற்குப் பிரதியுபகாரமாக சோரனுக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவியும், அவருடைய கட்சிக்கு இணை அமைச்சர் பதவியும் தருவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த நிம்மதியில் தூங்கி விட்டாரோ என்னவோ??
Comments
Story first published: Monday, July 21, 2008, 15:00 [IST]