ஆட்டோ கவிழ்ந்து வேல்கள் பாய்ந்து பக்தர் சாவு
விழுப்புரம்: கோயில் திருவிழாவில் வேல் காவடி எடுத்த பக்தர் வீடு திரும்பியபோது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் உடலில் ஏராளமான வேல்கள் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜமால் சவுக்கார் தெருவை சேர்ந்தவர் தீனன் (42). பம்ப் ஸ்டவ் கம்பெனி உரிமையாளர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு லதா (15), பிரபு (12) என்ற குழந்தைகள் உள்ளனர்.
தீனன், அம்மன் கோயில் திருவிழாக்களில் உடலில் வேல், அலகு குத்தி காவடி எடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கருமாரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவில் காவடி எடுப்பதற்காக தீனன், தனது நண்பர்கள் வேலு, நந்தகுமார், வரதன், ராஜேந்திரன், ஜோதி ஆகியோருடன் ஷேர் ஆட்டோவில் நேற்று முன்தினம் சென்றார்.
அங்கு காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். பின்னர் தீனன், காவடியில் இருந்த வேல் கம்புகளை தனியாக எடுத்து ஆட்டோவின் பின்னால் வைத்துக் கொண்டு, சென்னைக்கு புறப்பட்டனர்.
விழுப்புரம் அருகே கூட்டேரிப்பட்டு மெயின்ரோட்டில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், தனியாக கட்டி வைக்கப்பட்டிருந்த வேல்கள் தீனனின் உடலில் தாறுமாறாக குத்தின. வயிறு, மார்பு, கழுத்து, முகம் என பல இடங்களில் வேல் குத்தி துளைத்தது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தீனன் துடிதுடித்து இறந்தார்.
அவருடன் சென்ற அவரது நண்பர்கள் வேலு, பரதன், நந்தகுமார், ஜோதி, ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications