பலியான மீனவர் குடும்பத்துக்கு அரசு வேலை-திருமா
நாகை: இலங்கை கடற்படையால் கொலைப்பட்ட தமிழக மீனவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இலங்கை அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளன் பேசியதாவது
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு அவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது, பயிற்சி அளிப்பது போன்றவற்றை உடனே நிறுத்த வேண்டும். மீனவர்களை தாக்கியது விடுதலை புலிகள் தான் என்று இலங்கை அரசு கூறுவது அவதூறான செயலாகும்.
தமிழக அரசு சட்டசபையை கூட்டி தமிழக மீனவர்களின் நலன் காக்க தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications