கட்சி மாறி ஒட்டு-பிஜு ஜனதாதள எம்பி நீக்கம்
புவனேஸ்வர்: நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்பி ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக 13 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
இதில், பாஜவைச் சேர்ந்த 7 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 2 பேர், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் என 13 எம்பிக்கள் கட்சி மாறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்பி ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அக்கட்சித் தலைவரும், ஒரிஸா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இதனிடையே தன்னுடைய மனதின் 'உள் குரல்' காரணமாக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஹரிகர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications