For Daily Alerts
Just In
திருச்சியில் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
திருச்சி: கலெக்டர் தலைமையில் பண்ணைகளில் நடந்த அதிரடி ரெய்டில் அங்கு வேலை செய்த 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 16, 17ம் தேதிகளில் அதிரடி ரெய்டு நடத்தினார். குறிப்பாக பண்ணைகளில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அப்போது அங்கு வேலை செய்த 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரைகளையும் அதிகாரிகள் வழங்கினர்.
இதுதொடர்பாக பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் ரூ.20,000 அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் சவுண்டையா தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, July 23, 2008, 14:36 [IST]