கோடியை 'கொட்டிய' எம்.பிக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தில் ரூ. 1 கோடியைக் கொட்டிய 3 பாஜக எம்பிக்களுக்கும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகியோர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவுக்கு வாக்களிக்க கோரி தங்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் ரூ. 9 கோடி பேரம் பேசி, அதில் ரூ. 1 கோடியை முன் பணமாக லஞ்சம் தந்ததாகக் கூறி அதை மக்களவையின் மையத்தில் வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார்.
மேலும் சபாநாயகரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இந்த 3 எம்.பி.க்களுக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், இந்த பண பேர விவகாரம் குறித்து தன்னிடம் முழு விளக்கம் அளிக்குமாறு மூவருக்கும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என 3 எம்.பிக்களும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications