குலுக்கலில் 10 லட்சம் டாலர் வென்ற இந்தியர்
துபாய்: கத்தார் டியூட்டி ஃப்ரி நடத்திய குலுக்கலில் இந்தியர் ஒருவர் பத்து லட்சம் டாலர் பரிசாக பெற்றுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ரூபேஷ் கிடவுனில் (31). தோஹாவில் வசிக்கும் இவர் கத்தார் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கத்தார் டியூட்டி ஃப்ரி சார்பில் நடந்த குலுக்கலில் பத்து லட்சம் டாலர் பரிசாக வென்றுள்ளார் ரூபேஷ்.
திருமணமான ரூபேஷூக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. மகன் பிறந்த நேரம் ரூபேஷ் லட்சாதிபதியாகிவிட்டார். குழந்தையை பார்க்க கேரளா புறப்பட்ட ரூபேஷூக்கு அதிர்ஷ்டம் விமான நிலையத்தில் காத்திருந்தது.
இதன் மூலம் கத்தார் டியூட்டி ஃப்ரியின் 3வது லட்சாதிபதியாக உயரத்துக்கு சென்றுள்ளார் ரூபேஷ். இந்த பரிசு தனக்கு ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது என்று அவர் சந்தோஷம் மேலிட கூறியுள்ளார்.
கடந்த 2006 மே மாதத்தில் இருந்து கத்தார் டியூட்டி ஃப்ரி இந்த குலுக்கலை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications