இடதுசாரிகள் மீது துவேஷம் இல்லை: பிரணாப்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன், கசப்பான வகையில் உறவை இடதுசாரிகள் முறித்துக் கொண்டாலும் கூட எங்களுக்கு அவர்கள் மீது எந்த துவேஷமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து என்டிடிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு அவர்கள் விலகியதால் வருத்தம் உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த துவேஷமும், கசப்புணர்வும் இல்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கிடையில்தான் கூட்டணியை தொடர்ந்து வந்தோம். இப்போது அவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால் எங்களுக்கு அவர்கள் மீது வருத்தம் உள்ளதே தவிர கசப்புணர்வு எதுவும் இல்லை.
இடதுசாரி கட்சிகள் மீதோ, இடதுசாரி தலைவர்கள் மீதோ எங்களுக்கு எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை. என்னை அவர்கள் மிகக் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளனர். இருந்தாலும் எனக்கு அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை.
மீண்டும் இடதுசாரிகளுடன் கூட்டணி ஏற்படுமா என்து எனக்குத் தெரியாது. அது சூழ்நிலையைப் பொறுத்தது. நான் அரசியல் ஜோதிடராக மாற விரும்பவில்லை.
இந்தக் கூட்டணி உருவாவதற்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ஜோதிபாசு. நான் அவரை சந்தித்தபோது கூட்டணி உடையக் கூடாது என்று விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்த முயற்சியில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று அவரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் பிரணாப்.
-












Click it and Unblock the Notifications