சமீப காலத்தில் நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்புகள்
மே 13, 2008: ஜெய்ப்பூரில் எட்டு குண்டுவெடிப்புள் நடந்தன. 65 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
ஜனவரி, 2008: ராம்பூர் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
அக்டோபர், 2007: அஜாமீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட், 2007: ஹைதராபாத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் படுகாயமடைந்தனர்.
மே, 2007: ஹைதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.
பிப், 19, 2007: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற ரயிலில் குண்டுவெடித்து 66 பேர் உயிரிழந்தனர்.
செப்டம்பர், 2006: மாலேகான் பகுதியில் மசூதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 30 பேர் இறந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.
ஜூலை, 2006: மும்பை ரயில்களில் நடந்த 7 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர்.
மார்ச், 2006: வாரணாசியில் ரயில் நிலையம் மற்றும் கோவிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர், 2005: டெல்லி மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 62 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications