திருப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் வருமான வரி சோதனை
திருப்பூர்: திருப்பூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உள்பட சுமார் 10 ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்று வருவதால் அங்கு இயற்கையாகவே நிலத்தின் மதிப்பு அதிகம்.
மேலும் நகராட்சியாக செயல்பட்டு வந்த திருப்பூரை மாநகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. இதனால் திருப்பூரின் நிலத்தின் மதிப்பு மதிப்பிட முடியாத அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பெரும் லாபம் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களில் உரிய வருமான வரியை செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
இந் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பழனிசாமியும் அடங்குவார். இவர் அரசியலை விட ரியல் எஸ்டேட் தொழிலில் தான் இப்போது அதிதீவிரமாக உள்ளார்.
இவர் தவிர மேலும் 9 பேர் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின.












Click it and Unblock the Notifications