ராமர் பாலம்: மத்திய அரசு விதண்டாவாதம் செய்கிறது-ஜெ
சென்னை: தான் கட்டிய பாலத்தை ராமர் தானே இடித்து விட்டதாக மத்திய அரசு விதண்டாவாதம் செய்து கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை கொதிப்படைய வைத்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகெங்கும் வாழும் பலகோடி மக்களால் போற்றி வணங்கப்படும் ராம பிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம்தான்; அந்தப்பெயருக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்தது.
ஆனல் தற்போது ராமர் உருவாக்கிய பாலத்தை அவரே உடைத்து போட்டு விட்டார்; இப்போது ராமர் பாலம் என்று எதுவும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வாதத்தை முன் வைத்திருக்கிறது. மத்திய அரசின் இப்புதிய விதண்டாவாதம்
நாட்டில் மீண்டும் ஓர் உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும்.
தான் உருவாக்கிய பாலத்தை ராம பிரான் தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை என்று ராமாயணத்தை கற்றுத் தெரிந்த வல்லுநர்கள் அறுதியிட்டு உறுதியாக கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது.
1963ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஷ்மீரில் ஹஸ்ரத்பல் திருத்தலத்தில் இருந்த புனிதப்பொருள் களவாடப்பட்டதால் பெரும் கலவரம் வெடித்தது. பெரு முயற்சிக்கு பிறகு அந்தப் பொருள் மீட்கப்பட்டது. களவு போன பொருள் புனிதப்பொருளா? அது உண்மையானதா? தொன்மையானதா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல், மன வேதனையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புனிதப் பொருள் மீட்கப்பட அப்போதைய மத்திய அரசு முயன்றது.
அதைப் போலவே டேன் பிரவுன் எழுதிய 'தி டாவின்ஸி கோட்' என்ற புத்தகம் திரைப்படமாக 2006ல் திரைக்கு வந்தபோது கிறிஸ்துவ சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக திரையரங்குகளில் அப்படம் காட்டப் படுவது ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் கோடானு கோடி இந்துக்களின் இறைநம்பிக்கை என்று வருமேயானால் அதில் ஒரு அக்கறையின்மை மத்திய அரசின் செயல் பாடுகளில் வெளிப்படுகிறது.
இந்துக்களை காயப்படுத்தினாலோ, அவர்களின் மத உணர்வுகளை களங்கப்படுத்தினாலோ அதில் இந்த மத்திய அரசுக்கு துளியும் ஆட்சேபமில்லை. இது என்ன வகையான மதச்சார்பின்மை கொள்கையோ தெரியவில்லை.
ராமர் சேதுவைத் தகர்த்து மதக்கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அதிமுக சகித்துக் கொள்ளாது. அத்தகைய முயற்சி ஏதும் நடைபெற்றால் அதனை எல்லா முறைகளிலும் அதிமுக எதிர்க்கும். உண்மையான மதச்சார்பின்மையை காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் போராடுவோம் என்பது உறுதி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications